பள்ளிகளில் இருந்து நம் புரட்சிப் பயணம் தொடங்கட்டும்....

சாதி சார்ந்த, மதம் சார்ந்த, தனிமனித ஒழுக்கம் சார்ந்த
ஒரு பதற்றமான செய்தி தினசரி ஊடகங்களாலும், social media'க்களாலும் பர‌ப்பப்படுகிறது. உடனே அதற்கான கண்டனம், வருத்தம், தொலைக்காட்சி விவாதம், சில மீம்ஸ், சில பதிவுகள் என புற்றிசல் கூட்டம் போல அதிகமாக வந்து ஓர் இரவில் காணாமல் போகிறது. இந்தப் போக்கு நம்மை "இன்று ஒரு பிரச்சனை கூட இல்லையே..!" என்று கவலைப்படும் அளவுக்கு மனநோயாளியாக மாற்றிவிட்டது.

சக மனிதர்கள் சந்திக்கும் போது
"சவுக்கியமா?.. பார்த்து எத்தனை நாளாச்சு ...?" என்று கேட்ட காலம் மாறி "இன்னக்கி என்ன பிரச்சனை..?" என்று கேட்கும் காலமாகி விட்டது. இதை  அரசியல் அறிவில் எற்பட்ட முன்னேற்றம் என்று பார்ப்பதா அல்லது சக மனிதர்கள் இந்த மனநோய்க்கு பலியாகி விட்டார்கள் என்று பார்ப்பதா எனத் தெரியவில்லை.

எந்த சமுகத்திலும் குற்றங்கள், தவறுகள் என்பது அறவே இல்லாமல் போகாது. கொள்கை முரண்பாடுகள், சமுக சிக்கல்கள், வர்க்க வேற்றுமை சுரண்டல்கள் மொத்தமாக இல்லாமல் ஒழிந்துவிடாது. அப்படியான  சமுகத்தை ஒருநாளும் படைத்துவிட முடியாது.

ஆனால் மனிதமற்ற இந்தப் போக்கு உலகம் முழுவதும் இன்று கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. மனிதம் என்ற சொல் பொதுமக்கள் மனதிலும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கி விட்டது.

இதற்கு அரசியல்வாதிகள் போல, ஊடகங்கள் போல தினம் ஒரு சம்பவம் என்று பேசிக் கொண்டிருப்பது தீர்வல்ல. பிரச்சனைகளின் வேர்களோடு போராடத் தொடங்க வேண்டும். நாம் முதலில் கற்க வேண்டும், பின் நாம் மாற வேண்டும், பின் பணி செய்ய வேண்டும்.
இவைகள் ஒரே நாளில் நடந்துவிடாது.

கடந்த தலைமுறையை மாற்ற நினைப்பதை விட, இன்றைய தலைமுறையோடு சண்டையிடுவதை விட, நாளைய தலைமுறையோடு உரையாடுவது, அவர்களைப் பண்படுத்துவது மிக சரியானதாக இருக்கும்.
இனி எதிர்காலத்தில் மாணவர்கள் யாரும் எண், எழுத்து காற்றுக் கொள்ள பள்ளிக்கு வரமாட்டார்கள், மாறாக ஒழுக்கம், பண்பாடு மனிதம் பற்றிய புரிதலுக்கு மட்டுமே வருவார்கள்.

தனிமனிதராக ஆசிரியர்களிடயேயும் இந்த சமூகம் சார்ந்த, சாதி- மதம் சார்ந்த தனிப்பட்ட வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் சிறந்த குடிமகனை, மனிதத்தை, மேம்பட்ட  சமுகத்தை ஏற்படுத்தும் வல்லமை ஆசிரியர்களிடம் மட்டுமே காணப்படுகிறது எனவே தன் தனிமனித வேறுபாடுகளை கடந்து மாணவர்களிடையே மனிதத்தை, மான்பை, பண்பாட்டை, அன்பை விதைப்போம்.  துவங்க உள்ள புதிய கல்வி ஆண்டு  புரட்சியின் தொடக்கமாக அமையட்டும்...

பிஞ்சு குழந்தைகள் மனதில்  அவர்கள் சாதியத்தை வளர்க்கும் முன்  ; நாம் அவர்கள் மனதில் மனிதத்தை விதைப்போம்.

பள்ளிகளில் இருந்து நம் புரட்சிப் பயணம் தொடங்கட்டும்....

Comments

Popular posts from this blog

‘இந்திய விடுதலை வீரர்' மௌலானா ஹஸ்ரத் மஹானி

ஆசிரியர்கள் அவசியம் அறியவேண்டிய உணர் திறனறிவு