புரட்சித் தளபதி சந்திர சேகர ஆசாத்
புரட்சித் தளபதி சந்திர சேகர ஆசாத் “ உன் பெயர் என்ன” “ என் பெயர் ஆசாத் (விடுதலை)” “ உன் அப்பா பெயர் என்ன” “ சுதீன் (சுதந்திரம்)” “ உன் வீடு எங்கே இருக்கிறது” “ சிறைச்சாலையில்” இப்படி நீதிமன்றத்தில் பதில் கூறிய இளைஹனுக்கு வயது பதினான்கு. அவர் பெயர் சந்திர சேகர ஆசாத். காசி வித்யா பீடத்தில் சமஸ்கிருத மேற்கல்வி கற்க வந்த போதே விடுதலைப்போரில் - ஒத்துழையாமை இயக்கத்தில் குதித்தவர் சந்திரசேகர ஆசாத். பதினான்கு வயது என்பதால் நீதிமன்றம் அவருக்குப் பதினைந்து கசையடித் தண்டனை அளித்தது. கசையடிகளைத் தாங்கிக் கொண்டு வெளியே வரும்போது “வந்தே மாதிரம்”, “மகாத்மா காந்திஜிக்கு ஜே” என்று முழக்கமிட்டார். இது நடந்தது 1922 ஆம் ஆண்டு. மத்திய பிரதேச மாநிலம், ஜாபுவா மாவட்டம், சாடுவா தாலுகா, பாவ்ரா கிராமத்தில் பண்டிட் சீதாராம் திவாரி - ஜெகராணி தேவி தம்பதியினருக்கு 1906 ஆம் ஆண்டு ஜிலை 23 ஆம் நாள் பிறந்தார். ஆசாத் சிறுவயதில் படிப்பைவிட வில் - அம்பு விடுவதிலும், துப்பாக்கிச் சுடுவதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அவரது பெற்றோர் வட்டார அலுவலகத்தில் எடுபிடி வேலைக்குச் சேர்த்துவிட்டனர். ஆசாத்துக்கு அங்கு வேலை