Posts

Showing posts from February, 2020

கல்வியில் வாழ்வியல் திறன்கள்.

கல்வியில் வாழ்வியல் திறன்கள். கல்வி என்பது படிக்கும் பாடத்தை முழுமையாக புரிந்துகொள்ள உதவ வேண்டும் மேலும் மனித ஆளுமைப் பண்புகளையும், வல்லமையையும் உருவாக்க வல்ல மனித விழுமியங்களை பயிற்றுவிப்பதாக அமைய வேண்டும் விழுமங்கள் என்பன உலகம் எப்படி இருக்கின்றது, என்பதை விடவும் உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது. வாழ்வியலை திறன்களை, மனிதனின் உள்ளார்ந்த பண்பாக நின்று அவனை வாழ்க்கை முழுவதும் நெறிப்படுத்த கூடியதாக வாழ்க்கையோடு ஒன்றி கலந்து விடும் படி முறையாக பயிற்றுவிக்கப்பட வேண்டும். மனிதப் பண்பை ஊட்டி அவனுடைய ஆளுமையை மேம்படுத்தி, சமூகத்தில் சிறந்த வாழ்வை நடத்தும் அளவிற்கு நல்லதொரு குடிமகனாக உருவாக வல்லதாக கல்வி அமைய வேண்டும். பெற்ற அறிவை எவ்வாறு நன் முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும், எது சரி, எது தவறு என இனம் காணும் அளவும் தனிமனித ஒழுக்கம் மற்றும் சமுதாய கடமையை இளைய சமூகத்திற்கு கற்றுத்தர வேண்டும். கல்வியின் நோக்கம் சமூக கட்டமைப்பில் குழந்தைகளை பொறுப்புள்ள ஆரோக்கியமான அங்கங்களாக மாற்றி அதன் மூலம் சமூகத்தின் மேம்பாட்டிற்கு மாணவர்கள் பங்கு அளிக்கும் வகையிலும், அதன் வாயிலாக