ஆசிரியர்கள் அவசியம் அறியவேண்டிய உணர் திறனறிவு
உணர் திறனறிவு – EMOTIONAL INTELLIGENCE ஒருவரின் புத்திக்கூர்மை அல்லது அறிவுத்திறனை I.Q என்று அளவிட்டுச் சொல்ல முடியும். ஆனால் இதற்கு மேலயும் ஒருவரின் அறிவுத்திறனை அளக்கும் அளவுகோல்கள் உண்டு. அது “ Emotional Intelligence” என சொல்லப்படும் “EIQ/EQ” ”உணர் அறிவுத்திறன்” என்பதாகும். I.Q ஐ விட 3 மடங்கு பெரியது. மாணவர்கள், அவர்களின் பெற்றோர், சக ஆசிரியர்கள் என நேரடியாக சமுதாயத்துடன் தொடர்பில் உள்ள ஆசிரியர் பேரினத்திற்கு EQ பற்றிய புரிதல் அவசியம், அது என்ன EQ என்பதைக் காண்போம். ”உணர் திறனறிவு” என்பது நாம் எவ்வாறு நம்முடைய உணர்வுகளையும், மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு இறுதிவரை அவர்களுடனான உறவுகளைப் பேணுவதாகும். டானியல் கோல்மேன் என்ற அமெரிக்க உளவியல் நிபுணர் இதனை 5 கூறுகளாக பிரித்துள்ளார். அதையாவன, 1. தன்னையறிதல் (self-awareness) 2. சுயகட்டுப்பாடு (self-regulation) 3. ஊக்கமுடமை (motivation) 4. சமூக அறிவு (social skills) 5. பச்சாதாபம். (Empathy) தன்னையறிதல் (self-awareness) தன்னையறிதல் என்பது ஒர் கலை. பிறரை அறிந்தவன் புத்திசாலி, தன்னை அறிந்தவன் ஞானி என்பது சீனத்து ஞானி ஒரு