பள்ளிக்கல்வியின் வீழ்ச்சி
பள்ளிக்கல்வியின் வீழ்ச்சியும் ; மாணவர்களின் பாதிப்பும் இந்திய அரசமைப்புச் சட்டம் நடப்புக்கு வந்த பின், பத்து ஆண்டுகளுக்குள் - அதாவது 1960க்குள் 14 அகவைக் குட்பட்டவர்களுக்குக் கட்டாய இலவயக் கல்வி அளித்திட அரசு முயல வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் எழுதப் பட்டுள்ளது. ஆனால் அய்ம்பது ஆண்டுகள் கழித்து - 2010இல் தான் இலவய, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடப்புக்கு வந்தது. 2018ஆம் ஆண்டில் ஆறு அகவை எய்திய சிறுவர்களில் 96 விழுக்காட்டினர் பள்ளியில் பயில் கின்றனர். ஆனால் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் கவலைக்குரியதாக இருக்கிறது. ‘பிரதாம்’ என்கிற தொண்டு நிறுவனம் 2006ஆம் ஆண்டு முதல் இந்திய அளவில் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இது “கல்வி நிலை குறித்த ஆண்டறிக்கை” (Annual Status of Education Report – ASER - ஆசர்) எனப்படுகிறது. 2018ஆம் ஆண்டில் ஊரகப் பகுதிகளைக் கொண்ட 596 மாவட்டங்களில் 5.5 இலட்சம் மாணவர்களிடம் ஆய்வு செய்தது. தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் 930 ஊர்களில் 15,749 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2018ஆம் ஆண்டிற்கான ஆ